Sunday 18 March 2012


இழப்பின் வலி தாங்க முடியாதது..
அது மீள முடியாத சோகம்
தாங்க முடியாத கவலை...!!
அதிலும், பாதியிலே பிள்ளையைப் பறி கொடுக்கும் பெற்றோரின்
நிலையென்பது யாருக்கும் வரக்கூடாது..இந்த வலி சாகும் வரைக்கும் இதயத்தில்
எங்கோ ஒரு மூலையில் நின்று அடித்துக் கொண்டேயிருக்கும்..
அந்த வேதனை சந்தோசத்திலும் துக்கத்திலும் மின்னி மின்னி மறைந்து ஒளிர்ந்து
கொண்டேயிருக்கும்...........
புத்திர சோகம்..மிக்க் கொடுமை....
..
ஆஷிபா.............
உன் இழப்பை எண்ணி என் மனம் கலங்குகிறது..
உன் பெற்றோர் எப்படி சமாளிக்கப் போகிறார்கள்..........
இறைவா.. .....................
அந்தப் பெற்றோரக்கு தாங்கும் சக்தியைக் கொடு........
மன தைரியத்ததைக் கொடு..
நிறைவாகப் பொறுமையைக் கொடு......
ஆமீன்........



நாகரீகம் என்பது நாம் அணிகின்ற ஆடைகளில் இல்லை.
 மாறாக, பேசுகின்ற பேச்சிலும்,
 வாழ்கின்ற வாழ்க்கையிலும் தான் இருக்கிறது.......


வாழ்க்கையில் அனுபவம் கற்றுத் தருகின்ற பாடத்தை வேறு எதனாலும் கற்றுத் தர முடியாது.......................