Monday 27 June 2011


நேரத்தின் அருமை
” நீங்கள் வாழ்க்கையை விரும்புகிறீர்களா..?அப்படியானால் நேரத்தை வீணடிககாதீர்கள், ஏனென்றால் வாழ்க்கை என்பது நேரம் என்பதைக் கொண்டு தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.”
                                                                   - Benjamin Franklin.-


நேரத்தைப் பற்றிய சிந்தனை ஒவ்வொருக்குமே தேவை. ஆனால் அது மிகவும் முக்கியம் ஒரு சாதனையாளனுக்கு.. முயற்சியும் உழைப்பும் மட்டுமல்ல காலத்தைக் கவனிக்காமல் விட்டால் விபரீதமான  பின்விளைவுகளை சந்திக்க வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காலத்ததைக் கணக்கு வைத்து எடுக்காத அடியளெல்லாம்  மனிதனைக் குப்புறத்தான் தள்ளியிருக்கின்றன.. 

தூக்கிவிட்டதாக எனக்கு தெரியவில்லை...

போனால் திரும்பக் கிடைக்காத விசயங்களுள் நேரமும் ஒன்று..எனவே நேரத்தைக் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்...

அன்புடன்   ..Shaifa


அம்மா....................
பா எடுத்து நான் பாட ,
பா வரிகள் இல்லையம்மா...
பாரினிலே உன்னை யன்றி
வேறு துணை ஏது அம்மா...

பாசம் ஒன்றை  பக்குவமாய்,
பாகாய் நீயும் தந்தாயம்மா...
ஐயிரண்டு மாதங்களாய்,
உன் மடியில் சுமந்தாயம்மா..
கணத்த சுமை என்றாலும்  நீ,
சுகமே சுமை என்றாயம்மா...

அம்மா.. .. என்றால் ,
அடிவயிறு கணக்கு மென்று ,
ஆரோ சொன்ன வார்த்தை  இப்போ
நிஜத்தில் நானும் உணர்ந்தேனம்மா...

சொத்து சுகங்கள் சேர்த்திட்டாலும்,
கோடி சொகுசு வந்திட்டாலும் ,
என்னைப் பெத்த அம்மா உனை
போல எதுவும் ஆகிடுமோ..?
உனக்கு ஈடு இணை ஆகிடுமோ...?

அன்புடன்...Shaifa