Tuesday 30 April 2013

படித்ததில் பிடித்தது

ஒரு குட்டி கதை சொல்லும் பாடம் நமக்கு !!!

‘குருவே, என்னால் சந்தோஷமாகவே இருக்க முடியவில்லை. மனசு எதையோ. தேடிக்கிட்டே இருக்கு’’ என்றான் வந்தவன்.

‘‘அப்படியா?’’ ‘‘ஆமாம் குருவே.

ஆனால், என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்பசந்தோஷமா இருக்கான்.எந்தக் கவலையுமில்லாம இருக்கான். எப்படினே தெரியல. என்னால அப்படி இருக்க முடியல.’’ குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார். ‘‘இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கிறது. இதை உன் பக்கத்து வீட்டுக்காரன் வாசலில் போடு. அதன்பிறகு என்ன நடக்கிறது என்று சொல்’’ என்றார். குரு சொன்னபடியே செய்தான் வந்தவன்.மூன்று நாட்கள் கழித்து குருவிடம் வந்தான். ‘‘குருவே, அவன் நிம்மதியே போச்சு.’’ ‘‘அப்படியா, ஏன்? அவனுக்குத்தான் ஒன்பது தங்கக் காசுகள் கிடைத்திருக்குமே...

’’ ‘‘அதான் பிரச்னையே. விடியற் காலையில் அவன் வீட்டு வாசலில் காசுகளைப் போட்டு விட்டேன். எழுந்து வந்து பார்த்த அவன், தங்கக் காசுகளைப் பார்த்ததும் குஷியாகிவிட்டான். ஆனால், ஒன்பது காசுகள்தான் இருப்பதைப் பார்த்ததும், கண்டிப்பாய் பத்தாவது காசு எங்காவது விழுந்து கிடக்கும் என்று தேடத் துவங்கினான். வீட்டில் தேடினான். தெருவில் தேடினான். போகிற வருகிறவர்களிடமெல்லாம் கேட்டான். இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.’’ ‘‘இருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடும், புரிகிறதா?’’ என்றார் குரு.

இதில் இருக்கிற விசயம் என்ன வென்றால்..நான் மட்டும் அல்ல நிங்கள் மட்டும் அல்ல .. நாங்கள் எல்லொருமே.. எங்களிடம் என்னதான இருந்தாலும்.. அதில் ச்நதொசப்படுபவர்களாகவொஇ.இ திருப்தி படுவபவர்களாகவோ இல்ல..
ஆசைகளின் அளவை நாளுக்கு நாள்.. மேல் நோக்கி நகர்தும் மனிதர்களாகவே நாம்.. இருககிறாம்். இதனால்
சந்தொசத்தை தொலைக்கிறோம்.. நிம்மதியை இழக்கிறோம்..உண்மையில் இருப்பதில் இரப்பதில் திரப்தி
காணா  விட்டால் நிச்சயமாக நிம்மதி போய்விடும்......இது தான் யதார்த்தம்....