Saturday 9 June 2012

வானுயர வாழ்த்துவோம்..
வளம் பெற போற்றுவோம்
பதினைந்தின் அகவையில் இன்று வாழ்த்துவோம்..11
நெஞ்சின் இனிமையான நினைவினால்...
நாம் பெருமையோடு பாடுவோம்...11

பார் போற்ற    தமிழை  நீ
உலகினிற்கு தந்தாயே..
பாலர்கள் சேர்ந்தே தினம்
பாடிடவே செய்தாயே..11
மாறாது.. மாறாது..
நம் எண்ணம் மாறாது...
உறவாக நாம் கொண்ட
எண்ணம் மாறாது......11

வானுயர வாழ்த்துவோம்..
வளம் பெற ..போற்றுவோம்
பதினைந்தின் அகவையில் இன்று வாழ்த்துவோம்

நேயமொடு வாழ்வை..தினம்
வாழும் வழி சொன்னாயே...
ஒன்றல்ல பலவாய் வாழ்வின்
 படிப்பினைகள்சொன்னாயே...11
மாறாது.. மாறாது..
நம் எண்ணம் மாறாது...
உறவாக நாம் கொண்ட
எண்ணம் மாறாது......11

வானுயர வாழ்த்துவோம்..
வளம் பெற போற்றுவோம்
பதினைந்தின் அகவையில் இன்று வாழ்த்துவோம்..11
நெஞ்சின் இனிமையான நினைவினால்...
நாம் பெருமையோடு பாடுவோம்...11

Anbudan --Shaifa





Sunday 18 March 2012


இழப்பின் வலி தாங்க முடியாதது..
அது மீள முடியாத சோகம்
தாங்க முடியாத கவலை...!!
அதிலும், பாதியிலே பிள்ளையைப் பறி கொடுக்கும் பெற்றோரின்
நிலையென்பது யாருக்கும் வரக்கூடாது..இந்த வலி சாகும் வரைக்கும் இதயத்தில்
எங்கோ ஒரு மூலையில் நின்று அடித்துக் கொண்டேயிருக்கும்..
அந்த வேதனை சந்தோசத்திலும் துக்கத்திலும் மின்னி மின்னி மறைந்து ஒளிர்ந்து
கொண்டேயிருக்கும்...........
புத்திர சோகம்..மிக்க் கொடுமை....
..
ஆஷிபா.............
உன் இழப்பை எண்ணி என் மனம் கலங்குகிறது..
உன் பெற்றோர் எப்படி சமாளிக்கப் போகிறார்கள்..........
இறைவா.. .....................
அந்தப் பெற்றோரக்கு தாங்கும் சக்தியைக் கொடு........
மன தைரியத்ததைக் கொடு..
நிறைவாகப் பொறுமையைக் கொடு......
ஆமீன்........



நாகரீகம் என்பது நாம் அணிகின்ற ஆடைகளில் இல்லை.
 மாறாக, பேசுகின்ற பேச்சிலும்,
 வாழ்கின்ற வாழ்க்கையிலும் தான் இருக்கிறது.......


வாழ்க்கையில் அனுபவம் கற்றுத் தருகின்ற பாடத்தை வேறு எதனாலும் கற்றுத் தர முடியாது.......................

Sunday 12 February 2012

திரு. அஷ்ரப் சிஹாப்டீன் அவர்களின் சிந்தனையில்  , அழகான தலைப்புடன்.  50 அருமையான கவிகளுடன் எனக்குக்  கிடைத்த ஒரு அரும் பொக்கிஷம் "என்னை தீயில் எறிந்தவள்" .......................கவிகள் எல்லாமே அருமையிலும் அருமை!!  "நச்"என்று  பொறிதட்டும்  ஆர்ப்பாட்டமே இல்லாத எளிய நடைக் கவிகள்.. அநேகமானவைகள் ஒரு பக்க கவிதைகளாக இருந்தாலும் கூட அதன் ஆழம் மனதின் எங்கோ ஒரு மூலையில் பாதிப்பை ஏறபடுத்துவதையே   உணர முடிகிறது ..நான் படித்தவற்றில் எல்லாமே  என்னை அசர வைத்த  கவிகள் தான்.....எதிர்பாராத கவித் தலைப்புகள்... நினைத்துப் பார்க்காத கவியின் கரு.. இவை எல்லாமே " என்னை தீயில் எறிந்தவள் " ஐ  பலமுறை படித்துப பார்க்க தூண்டிய விஷயங்கள்.........

நிமிர்தல்
நாம் புல்லாய்  இருந்து விட்டு போவோம்
மரமாயிருப்பதில்
மகத்துவங்கள் உண்டெனினும்
புல்லாயிருப்பதுவே பொருந்தும் நமக்கு...

மரமாயிருப்பின்
பறவைகள் கூடமைத்துக்  கொள்ளும்
ஆயினும்,
நிழலில் இளைப்பாருவோர் மீது
எச்சமிடும் .

கோடரியுங் கொண்டு கொத்துவர்
வாள் கொண்டரறுப்பர்
பலகைகாய் ..

உயிர் துடிக்கத்
துண்டாக்கி துண்டு துண்டாக்கி
அடுக்கி  வைப்பார்  புழுவரிக்க ..

கட்டிலானால் கணிகையும் படுப்பாள்
யன்னலாகில் சாரல் நனைக்கும்
மனிதர் துப்ப எச்சில் தெறிக்கும்
கதவானால் ..
திறந்தும் மூடியும் வதைப்பார்

பெருங்  காற்றோ புரட்டி விட்டுப் போகும்
வெள்ளமோ இழுத்துத் தள்ளிவிடும்
எங்கோ.......
எல்லாம் முடிந்து விடும்

புல்லாயிருந்தால் மிதி படுவோம்
ஆயின்.......
புல்லாகவே  இருந்துவிட்டுப் போவோம்

மிதி பட மிதி பட
நிமிர முடியுமென்ற
ஒரே ஒரு காரணத்தால் ..............................

நன்றி.... என்னைத் தீயில் எறிந்தவள்..........................

Monday 27 June 2011


நேரத்தின் அருமை
” நீங்கள் வாழ்க்கையை விரும்புகிறீர்களா..?அப்படியானால் நேரத்தை வீணடிககாதீர்கள், ஏனென்றால் வாழ்க்கை என்பது நேரம் என்பதைக் கொண்டு தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.”
                                                                   - Benjamin Franklin.-


நேரத்தைப் பற்றிய சிந்தனை ஒவ்வொருக்குமே தேவை. ஆனால் அது மிகவும் முக்கியம் ஒரு சாதனையாளனுக்கு.. முயற்சியும் உழைப்பும் மட்டுமல்ல காலத்தைக் கவனிக்காமல் விட்டால் விபரீதமான  பின்விளைவுகளை சந்திக்க வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காலத்ததைக் கணக்கு வைத்து எடுக்காத அடியளெல்லாம்  மனிதனைக் குப்புறத்தான் தள்ளியிருக்கின்றன.. 

தூக்கிவிட்டதாக எனக்கு தெரியவில்லை...

போனால் திரும்பக் கிடைக்காத விசயங்களுள் நேரமும் ஒன்று..எனவே நேரத்தைக் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்...

அன்புடன்   ..Shaifa


அம்மா....................
பா எடுத்து நான் பாட ,
பா வரிகள் இல்லையம்மா...
பாரினிலே உன்னை யன்றி
வேறு துணை ஏது அம்மா...

பாசம் ஒன்றை  பக்குவமாய்,
பாகாய் நீயும் தந்தாயம்மா...
ஐயிரண்டு மாதங்களாய்,
உன் மடியில் சுமந்தாயம்மா..
கணத்த சுமை என்றாலும்  நீ,
சுகமே சுமை என்றாயம்மா...

அம்மா.. .. என்றால் ,
அடிவயிறு கணக்கு மென்று ,
ஆரோ சொன்ன வார்த்தை  இப்போ
நிஜத்தில் நானும் உணர்ந்தேனம்மா...

சொத்து சுகங்கள் சேர்த்திட்டாலும்,
கோடி சொகுசு வந்திட்டாலும் ,
என்னைப் பெத்த அம்மா உனை
போல எதுவும் ஆகிடுமோ..?
உனக்கு ஈடு இணை ஆகிடுமோ...?

அன்புடன்...Shaifa