Wednesday 14 January 2015

அறிந்தும் அறியாததும்-1


மரணித்த பிறகும் புத்தாடை அணிகிறாா் வி.ஐ. லெனின்
--------------------------------------------------------------------------------

லெனின் என்ற மனிதரை அறியாதவர் இருக்கமாட்டார்கள்.....ரஷ்யாவில் பொதுவுடமை ஆட்சியை நிறுவுவதற்குக் காரணமாக இருந்த முக்கிய அரசியல் தலைவர் லெனின் .. இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலியீச் உலியானாவ் என்பதாகும். ஆனால், இவருடைய புனை பெயரான "லெனின்" என்ற பெயரிலேயே இவரை உலகம் நன்கறியும். பொதுவுடமைக் கொள்கையை நிறுவிய உலகப் புகழ்பெற்ற கார்ல் மார்க்ஸ் என்பாரின் ஆர்வம் மிக்க சீடரான லெனின், மார்க்ஸ் அவ்வப்போது கோடி காட்டிய கொள்கைகளை நடைமுறையில் தீவிரமாகச் செயற்படுத்தினார் லெனின் உருவாக்கிய பொதுவுடமைக் கொள்கை வரலாற்றில் மிகுந்த செல்வாக்கு மிக்க மாந்தர்களுள் ஒருவராக அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறா


ரஷ்ய நாட்டின் தலைவா் வி.ஐ. லெனின் 1924 ஜனவாி மாதம் 21ம் திகதி மரணித்தாா். லெனின் இறந்தாலும் அவருடைய உடல் பதப்படுத்தப்பட்ட நிலையில் ரஷ்யாவில் உள்ள செஞ்சதுக்கத்தில் பாதுகாக்கப்பட்டது. அலங்கரிக்கப்பெற்ற நிலையில் அவரது உடல் பொது மக்களின் பார்வைக்கு 1930ம் ஆண்டில் இருந்து வைக்கப்பெற்றது இவ்விடத்திற்கு லெனின் மாஸோ லியம் என்று பெயர்
90 வருடங்களுக்கு மேலாக அவரது உடலம் மக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த உடலத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு உபயேகித்த இரசாயனப் பொருள் தொடா்பாக எவ்வித தகவல்களையும் ரஷ்யா வெளியிடாமலேயே வைத்திருந்தது.

சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகே, அதற்காக உபயோகிக்கப்பட்ட இரசாயனப் பொருள் தொடா்பான தகவல்கள் வெளிவரத்தொடங்கின.
ஒன்றரை வருடங்களுக்கு ஒருதடவை லெனினின் உடலத்திற்கு இரசாயனம் தடவப்பட்டு புதிய ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன.

லெனின் எனும் மாமனிதருக்கு ஒன்றரை வருடங்களுக்கு ஒரு முறை புத்தாடை அணிசவிக்கப்படுகிறார் என்பது அறியாத தகவல்..அதிசயமான படங்களும் ஆச்சரியத்தைத் தந்திருக்கும் என்று நம்புகிறேன்......
நன்றி..
இன்னுமொரு அறிந்ததும் அறியாத தகவலுடன் சந்திப்போம்........

நன்றி

சைபா அப்துல் மலீக்..

No comments:

Post a Comment