Wednesday 19 August 2015

இன்று ஆகஸட் 19 -உலக புகைப்படநாள்-(World photograph day )

இன்று ஆகஸட் 19 -உலக புகைப்படநாள்-(World photograph day )


உலக புகைப்பட நாள் (World photograph day) புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது
.
ஒரு புகைப்படத்திற்காக உலகப்புகழ் பெற்று புலிட்சர் விருது பெற்று
அதே புகைப்படத்திற்காகவே தற்கொலையும் செய்து கொண்டவரும் உண்டு

கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர் 1993 இல் சூடானில் நிலவிய பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்தார். பசியினால் உடல்மெலிந்த சிறுமி ஐக்கியநாடுகள் சபையின் உணவளிக்கும் கூடாரத்திற்குத் தவழ்ந்து சென்று கொண்டிருப்பதை படமெடுத்தார் கெவின். அச்சிறுமியின் உயிர் எப்போது பிரியும் அவளை இரையாக்கிக்கொள்ளலாம் எனக் காத்திருந்து வல்லூறு ஒன்றையும் சேர்த்தே க்ளிக் செய்ய 1993 மார்ச் திங்கள் 26 ஆம் தேதி நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் இந்த புகைப்படம் வெளியானது.

சொல்லிவைத்தாற்போல எல்லா வாசகரும் கேட்ட கேள்வி “அந்த சிறுமி என்னவானாள்? உயிர்பிழைத்தாளா?” என்பது தான் காட்டரிடம் பதில் இல்லை. 1994 மே திங்கள் 26-ம் நாள் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார். ஆனாலும் சிறுமியை காப்பாற்றாத குற்ற உணர்ச்சி அவரை சுழன்றடிக்க, சில நாட்கள் கழித்து ஜோஹன்ஸ்பர்க் கடற்கரையில் தன் காரிலேயே தற்கொலை செய்துகொண்டார். காரில் கிடந்த கடிதம் இப்படி தொடங்கியது.. I am Really, Really Sorry.

No comments:

Post a Comment