Thursday 1 February 2018

அடக்கி வாசித்தல்-நுணலும் தன் வாயால் கெடும்./Shaifa /01.02/18

ஒரு மனிதன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுச் சரியாக இருந்த போதும் அதை முன்வைப்பதற்கான நல்ல வார்த்தைகள் பயன்படுத்தப்பட வேண்டும். பிழையான வார்த்தை பயன்படுத்தப்பட்டால் அந்தக் குற்றச் சாட்டின் பெறுமானம் குறைந்து விடுகிறது. அதே வேளை குற்றம் சாட்டப்பட்டவன் குற்றம் சாட்டப்பட்டவரால் வெளிப்படுத்தப்பட்ட மோசமான வார்த்தைகளில் ஆத்திரப்பட்டு ஆத்திரத்தில் கன்னத்தில் அறையவும் கூடும். சிலவேளை இப்பிரச்சனை ஒரு கொலையிலே கூட முடிவடையலாம்.

எல்லாவற்றுக்கும் ஒரு தர்மம் உண்டு, எல்லையும் உண்டு. அது எப்போதேல்லாம் மீறப்படுகிறதோ அப்போதெல்லாம் விரும்பத்தகாதவை நடந்து முடிந்து விடுகின்றன. குடும்பங்களில், சமூகத்தில் இடம்பெறும் பிரச்சனைகளின் அடிவேரைத் தோண்டிச் சென்றால் அது ஒரு மோசாமான வார்த்தையாக இருக்கக் காண்போம்.

No comments:

Post a Comment