Saturday 1 February 2014

சரிதம் -ஜேம்ஸ் வோட்

”கிளிக்“

முடியாத பாரத்தை சுமக்கும் சிறுமி......


“கிளிக்”



பாண்டிச்சேரி பீச்சில் காகத்தைக் கூட நான் விடவில்லை

திணிக்கப்பட்ட கனகாம்பரம்..



பாண்டிச்சேரி.. பீச் பக்கமாக புத்தகம் வாசித்துதுக் கொண்டிருந்த என்னை
விடாமல் உசிப்பினாள் ஒரு பூக்கார அம்மா....என்ன சொல்லியும் விடாமல் என்கையில் திணிக்கப்பட்ட கனகாம்பரம் இது.....முக்காடால் என் தலை மறைக்கப்பட்டிருந்தாலும், ”வெள்ளிக்கிழமை அதுவுமாய் தலையில் பூ இல்லாமல் இருக்கிறே தாயீ..... என்று அந்த அமமா அடுக்கிக் கொண்டே போகிறாள்...... ...... வேண்டாம் நான் எப்படி பூ வைப்பது.... முக்காட்டுக்குள் பூ வைக்க முடியாது என்று பலமுறை சொல்லியும், அவள் புலம்பலுக்கு முன்னாள் நான் தோற்றே விட்டேன்......இறுதியில் இந்த கனகாம்பரம் என் கைப்பைக்குள் போனது. என்றாலும் இதன் வாசனை துாக்கல் தான்......
(அந்த அமமாவின் வியாபார உத்தியை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது........நினைத்துப் பார்க்கிறேன்.....

சைபா மலீக்

Friday 21 June 2013

"முதலைக்கண்ணீர் வடிக்கிறார்" என்கிறோமே அது ஏன் தெரியுமா..??

முதலைகள் தம் இரையை சாப்பிடும் முன் கண்ணீர் விடும் என்று ஆங்கிலேய பிரெஞ்சு எழுத்தாளர்கள் எழுதி உள்ளார்கள்.1400 இல் எழுதிய ஒரு பயண குறிப்பில் சேர் ஜான் மன்டெவில் என்பவர் முதலை ஒரு மனிதனை சாப்பிடும் முன் அழுததை பார்த்ததாக எழுதியுள்ளார். ஷேக்ஸ்பியர் அதையே எடுத்துக்கொண்டார். Othello Act IV, Scene i இல் "O devil, devil! If that the earth could teem with woman's tears, Each drop she falls would prove a crocodile. Out of my sight!"

உண்மையில் முதலைகளுக்கு கண்ணீர் சுரப்பிகள் கிடையாது /பற்றாக்குறை . தொண்டையின் பக்கத்தில் உள்ள சுரப்பிகள் எதையாவது விழுங்கும் போது கண்ணை நனைக்குமாம். இன்னொரு கருத்து நிலவுகிறது: முதலைகளின் கண்ணீர் சுரப்பிகளில் புரத நீர் சுரக்கிறது .நீரில் இருக்கும் போது அவை தெரிவதில்லை .வெளியே வரும் போது காய்ந்து விடுகிறது . முதலைகளால் கண்ணீர் வர வைக்க முடியும் .ஆனால் அவை அழுவதில்லை.

பதினாறு செல்வங்கள் எவை எவை

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா? அதன் விளக்கம் பின்வருமாறு:-

பதினாறு செல்வங்கள்:

1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத
குழந்தைகள்)
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
11.மாறாத வார்த்தை (வாய்மை)
12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)

இந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் அறுதியிட்டு கூறினர். உண்மைதானே? என்ன நான் சொல்றது?

வாழ்க நலமுடன்…!
"வெற்றி இரண்டு விதம்"

வழியில் வருகிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு வெற்றி காண்பது ஒருவிதம்.
மற்றவர்கள் கண்களுக்கு எளிமையாய்த் தென்படும் விஷயங்களில் கூடப் பெரிய வாய்ப்புகளைக் கண்டறிந்து, அதன் வழியே வெற்றிபெறுவது இன்னொருவிதம்