Sunday 2 February 2014

Dr. Roshan Zaid -Shaifa

சமகால விந்தை செய்திகள்

Saturday 1 February 2014

சரிதம் -ஜேம்ஸ் வோட்

”கிளிக்“

முடியாத பாரத்தை சுமக்கும் சிறுமி......


“கிளிக்”



பாண்டிச்சேரி பீச்சில் காகத்தைக் கூட நான் விடவில்லை

திணிக்கப்பட்ட கனகாம்பரம்..



பாண்டிச்சேரி.. பீச் பக்கமாக புத்தகம் வாசித்துதுக் கொண்டிருந்த என்னை
விடாமல் உசிப்பினாள் ஒரு பூக்கார அம்மா....என்ன சொல்லியும் விடாமல் என்கையில் திணிக்கப்பட்ட கனகாம்பரம் இது.....முக்காடால் என் தலை மறைக்கப்பட்டிருந்தாலும், ”வெள்ளிக்கிழமை அதுவுமாய் தலையில் பூ இல்லாமல் இருக்கிறே தாயீ..... என்று அந்த அமமா அடுக்கிக் கொண்டே போகிறாள்...... ...... வேண்டாம் நான் எப்படி பூ வைப்பது.... முக்காட்டுக்குள் பூ வைக்க முடியாது என்று பலமுறை சொல்லியும், அவள் புலம்பலுக்கு முன்னாள் நான் தோற்றே விட்டேன்......இறுதியில் இந்த கனகாம்பரம் என் கைப்பைக்குள் போனது. என்றாலும் இதன் வாசனை துாக்கல் தான்......
(அந்த அமமாவின் வியாபார உத்தியை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது........நினைத்துப் பார்க்கிறேன்.....

சைபா மலீக்

Friday 21 June 2013

"முதலைக்கண்ணீர் வடிக்கிறார்" என்கிறோமே அது ஏன் தெரியுமா..??

முதலைகள் தம் இரையை சாப்பிடும் முன் கண்ணீர் விடும் என்று ஆங்கிலேய பிரெஞ்சு எழுத்தாளர்கள் எழுதி உள்ளார்கள்.1400 இல் எழுதிய ஒரு பயண குறிப்பில் சேர் ஜான் மன்டெவில் என்பவர் முதலை ஒரு மனிதனை சாப்பிடும் முன் அழுததை பார்த்ததாக எழுதியுள்ளார். ஷேக்ஸ்பியர் அதையே எடுத்துக்கொண்டார். Othello Act IV, Scene i இல் "O devil, devil! If that the earth could teem with woman's tears, Each drop she falls would prove a crocodile. Out of my sight!"

உண்மையில் முதலைகளுக்கு கண்ணீர் சுரப்பிகள் கிடையாது /பற்றாக்குறை . தொண்டையின் பக்கத்தில் உள்ள சுரப்பிகள் எதையாவது விழுங்கும் போது கண்ணை நனைக்குமாம். இன்னொரு கருத்து நிலவுகிறது: முதலைகளின் கண்ணீர் சுரப்பிகளில் புரத நீர் சுரக்கிறது .நீரில் இருக்கும் போது அவை தெரிவதில்லை .வெளியே வரும் போது காய்ந்து விடுகிறது . முதலைகளால் கண்ணீர் வர வைக்க முடியும் .ஆனால் அவை அழுவதில்லை.