Thursday 24 May 2018

முதலில் நேர்மறை, பின்னரே எதிர்மறை உபதேசம் வேலை செய்யவேண்டும் என்றால் ஒருவரிடம் இருக்கும் தீயவற்றை எடை போடுவதைப் போன்றே நல்லவற்றையும் எடை போடவேண்டும். அப்போதுதான் உப தேசங்கள் வேலை செய்யும்..


உபதேசம்- முதலில் நேர்மறை பின்னரே எதிர்மறை


முதலில் நேர்மறை, பின்னரே எதிர்மறை
உபதேசம் வேலை செய்யவேண்டும் என்றால் ஒருவரிடம் இருக்கும் தீயவற்றை எடை போடுவதைப் போன்றே நல்லவற்றையும் எடை போடவேண்டும். அப்போதுதான் உப தேசங்கள் வேலை செய்யும்..

துாங்க மறந்தால்....../Shaifa


எதற்கு முதலிடம் ? மூளை ? மனம் ?


வாழ்க்கையில் எல்லா விஷயத்தையும் ஒரு போல அணுகுவது சரியாக இருக்காது. உணர்வுப் பூர்வமான விஷயங்களுக்கு மனம் சொல்வதைக் கேட்கலாம். முக்கிய விஷயங்களில், எதிர்கால சிந்தனை, நோக்கம், தொழில், படிப்பு போன்றவற்றுக்கு மூளை சொல்வதைக் கேட்பதே சரியாக இருக்கும்.

ஏன் என்றால், மூளை என்பது தராசு போல அனைத்தையும் தட்டில் வைத்து நிறுத்தி எது சரியோ அதை எடுத்துக் கூறும். பொதுவாகவே இந்த முடிவு 90 சதவீதம் மாறுபட வாய்ப்பு ஏற்படாது.

Thursday 1 February 2018

அடக்கி வாசித்தல்-நுணலும் தன் வாயால் கெடும்./Shaifa /01.02/18

ஒரு மனிதன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுச் சரியாக இருந்த போதும் அதை முன்வைப்பதற்கான நல்ல வார்த்தைகள் பயன்படுத்தப்பட வேண்டும். பிழையான வார்த்தை பயன்படுத்தப்பட்டால் அந்தக் குற்றச் சாட்டின் பெறுமானம் குறைந்து விடுகிறது. அதே வேளை குற்றம் சாட்டப்பட்டவன் குற்றம் சாட்டப்பட்டவரால் வெளிப்படுத்தப்பட்ட மோசமான வார்த்தைகளில் ஆத்திரப்பட்டு ஆத்திரத்தில் கன்னத்தில் அறையவும் கூடும். சிலவேளை இப்பிரச்சனை ஒரு கொலையிலே கூட முடிவடையலாம்.

எல்லாவற்றுக்கும் ஒரு தர்மம் உண்டு, எல்லையும் உண்டு. அது எப்போதேல்லாம் மீறப்படுகிறதோ அப்போதெல்லாம் விரும்பத்தகாதவை நடந்து முடிந்து விடுகின்றன. குடும்பங்களில், சமூகத்தில் இடம்பெறும் பிரச்சனைகளின் அடிவேரைத் தோண்டிச் சென்றால் அது ஒரு மோசாமான வார்த்தையாக இருக்கக் காண்போம்.

Sunday 21 January 2018

மறைந்த கடாபியின் மறுபக்கம்/ Shaifa/20-11-17


கடாபியின் ஆட்சியில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் போல் எந்த ஒரு ஐனயாயக நாட்டிலும் மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கவில்லை. தனது நாட்டு மக்களை நேசித்து அவர்களது வாழ்கையினை மேம்படுத்தும் ஒரு தலைவன் சர்வாதிகாரி என்றழைக்கப்பட்டால் அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே ...........

நீதி தரும் நிம்மதி /Shaifa/ 17-01-18

‘முமின்களே! நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும், அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்’. (4:135)