Thursday 24 May 2018

இஸலாம் கூறும் அழகிய கடன் முறை

‘விற்கும் போதும், வாங்கும் போதும், கடனை வசூலிக்கும் போதும் மென்மையாக நடக்கும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

வரலாற்றில் ஒரு கரும்புள்ளி-Titanic கப்பல்- கடைசி நிமிடங்கள்


முதலில் நேர்மறை, பின்னரே எதிர்மறை உபதேசம் வேலை செய்யவேண்டும் என்றால் ஒருவரிடம் இருக்கும் தீயவற்றை எடை போடுவதைப் போன்றே நல்லவற்றையும் எடை போடவேண்டும். அப்போதுதான் உப தேசங்கள் வேலை செய்யும்..


உபதேசம்- முதலில் நேர்மறை பின்னரே எதிர்மறை


முதலில் நேர்மறை, பின்னரே எதிர்மறை
உபதேசம் வேலை செய்யவேண்டும் என்றால் ஒருவரிடம் இருக்கும் தீயவற்றை எடை போடுவதைப் போன்றே நல்லவற்றையும் எடை போடவேண்டும். அப்போதுதான் உப தேசங்கள் வேலை செய்யும்..

துாங்க மறந்தால்....../Shaifa


எதற்கு முதலிடம் ? மூளை ? மனம் ?


வாழ்க்கையில் எல்லா விஷயத்தையும் ஒரு போல அணுகுவது சரியாக இருக்காது. உணர்வுப் பூர்வமான விஷயங்களுக்கு மனம் சொல்வதைக் கேட்கலாம். முக்கிய விஷயங்களில், எதிர்கால சிந்தனை, நோக்கம், தொழில், படிப்பு போன்றவற்றுக்கு மூளை சொல்வதைக் கேட்பதே சரியாக இருக்கும்.

ஏன் என்றால், மூளை என்பது தராசு போல அனைத்தையும் தட்டில் வைத்து நிறுத்தி எது சரியோ அதை எடுத்துக் கூறும். பொதுவாகவே இந்த முடிவு 90 சதவீதம் மாறுபட வாய்ப்பு ஏற்படாது.

Thursday 1 February 2018

அடக்கி வாசித்தல்-நுணலும் தன் வாயால் கெடும்./Shaifa /01.02/18

ஒரு மனிதன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுச் சரியாக இருந்த போதும் அதை முன்வைப்பதற்கான நல்ல வார்த்தைகள் பயன்படுத்தப்பட வேண்டும். பிழையான வார்த்தை பயன்படுத்தப்பட்டால் அந்தக் குற்றச் சாட்டின் பெறுமானம் குறைந்து விடுகிறது. அதே வேளை குற்றம் சாட்டப்பட்டவன் குற்றம் சாட்டப்பட்டவரால் வெளிப்படுத்தப்பட்ட மோசமான வார்த்தைகளில் ஆத்திரப்பட்டு ஆத்திரத்தில் கன்னத்தில் அறையவும் கூடும். சிலவேளை இப்பிரச்சனை ஒரு கொலையிலே கூட முடிவடையலாம்.

எல்லாவற்றுக்கும் ஒரு தர்மம் உண்டு, எல்லையும் உண்டு. அது எப்போதேல்லாம் மீறப்படுகிறதோ அப்போதெல்லாம் விரும்பத்தகாதவை நடந்து முடிந்து விடுகின்றன. குடும்பங்களில், சமூகத்தில் இடம்பெறும் பிரச்சனைகளின் அடிவேரைத் தோண்டிச் சென்றால் அது ஒரு மோசாமான வார்த்தையாக இருக்கக் காண்போம்.