Monday 25 June 2012

இஸ்லாம் காட்டும் வாழ்க்கை முறையும் . நன்மையை ஏவித்த தீமையைத் தடுப்பதில் எமது பங்களிப்பும், அவசியமும்..


    (விசுவாசங்கொண்டோரே!) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தவர்களிலெல்லாம்)மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நன்மையான காரியங்களைநீங்கள் ஏவுகிறீர்கள், தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள், மேலும் நீங்கள்அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள். (3:110)

 இஸ்லாம் என்பது பூரண வாழ்க்கையின் வடிவமாக தான் மக்களுக்குள்
புகுத்தப்பட்டது. ஒரு முழுமையான வாழ்வை வாழ்வதற்கான நெறிமுறைகள் . ஒழுக்க முறைகளோடு நிறைவாக வந்திட்ட ஒரு அழகான மர்ர்க்கமே இஸ்லாம்.  இதற்கேல்லாம் ஒரு அச்சாணியாக குர்ஆன் என்னும் வேத நூலையும் . முன் மாதிரியாக வாழ்ந்து காட்டிய இறுதித் தூதர்  நபி (ஸல்) அவர்களின் சொல், செயல்,  அங்கீகாரம் மூலம் வாழும் வழியையும் அழகாகச் சொன்ன, ஒரு உன்னத மார்க்கம் இஸ்லாம். எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கை அல்ல என்பதையும், அல்லாஹ் வகுத்திட்ட வரையறை, நெறி முறைகளில்,வாழ்வதே அல்லாஹ் விரும்பும் உண்மையான வாழ்க்கை என்பதையும் சொன்ன சத்திய மார்க்கம் இஸ்லாம்..மட்டுமல்லாமல், இந்த அழகான வாழ்க்கையை ஒரு சமுதாய அமைப்பில் ஒவ்வொரு மனிதனும் எப்படியாக எதிர்க்கொள்ள வேண்டும், என்பதையும் தெட்டத் தெளிவாக விளக்கியே கூறியிருக்கிறது..

இஸ்லாமிய சமுதாய அமைப்பு என்பது, தன்னை தான்தோன்றித்தனமாக அடையாளப்படுதவில்லை. மாறாக மனிதனை சிந்தனா சக்தி உள்ளவனாகவும், அடுத்தவர் பற்றிய கவலை உடையோனாகவும் அடையாளப் படுத்த முனைகிறது. அதாவது நன்மையின் பக்கம் மனிதனை இழுப்பவனாகவும் தீமைகள் அவை எந்த உருவத்தில் தலைகாட்டினாலும் எதிர்த்துப் போராடும் படி மக்களை தட்டி எழுப்புவனாக இருக்க வேண்டும் என்றும், தீமைகளை எதிர்த்து நிற்பதில் தன்னிடமிருக்கும் சக்திகள் அனைத்தையும் பயன்படுத்தி இவற்றின் மூலம் சமுதாயத்தில் வலுவானதொரு ஒழுக்கச் சூழலை உருவாக்குவதும் ஒவ்வொரு மனிதனிதும் மிக பெரிய கடமையாக இருக்கிறது என்பதையும் வலியுறுத்திச் சொல்கிறது...எனவே மனிதன் உலகத்திற்கு பாரிய பொறுப்புக்களொடு வந்திருக்கிறான்.. இந்த பொறுப்பக்களிலிருந்து  விடுபட நினைக்கும் எந்த மனிதனும். அல்லாஹ்வின் பார்வையில்  நல்ல மனிதனாக இனங்காணப்படடாட்டான். அவன் வெறும் சுயநலம் மிக்கவனாகவும், அல்லாஹ்வின் திருப்தியைப பெறாதவனாகவுமே கணிக்கப்படுவான்..


“உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) நன்மையின் பால் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுகின்றவர்களாகவும், தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்குகின்றவர்களாகவும் இருக்கட்டும். அவர்களேதாம் வெற்றி பெற்றோர்”. (3:104)
நன்மையை ஏவுவதற்கு முன் அவனிடம் இருக்கும் தீமைகள் எனும் களைகளைக் களைய வேண்டும் என்று சொல்கிறது அல்குர்ஆன்.., இவற்றிற்கிடையில் பிரிவை ஏற்படுத்தி, நன்மையை ஏவினால் போதும் என்று சொல்வது தெளிவான வழிகேடு என்றும் சொல்கிறது. இவற்றை இணைத்தே பேசியிருக்கிறது..நன்மையை ஏவினால் தீமை தானாக அழிந்து விடும் என்ற தத்துவமும் இஸலாத்தில் கூறப்படாத விடயம். இந்த விடயத்தில் அல்லாஹ்வின் அடியான் மிகக் கவனமாக அவதானத்ததைக் காட்ட வேண்டும்.

அடுத்து இன்னும் ஒரு விடயம் இங்கே உன்னிப்பாக கவனிக்கப்படவேண்டும்..அதாவது தவறுகளைக் காணாதது போல் ..அல்லது அது தவறு அல்ல என்பது போல் நடந்து கொள்ளச் செய்யும் போக்கு இஸ்லாமிய சித்ததாந்த்தில் எங்கும் இல்லை..மாற்று மதங்களில் அது கடைப்பிடிக்கப்பட்டாலும்.. இஸ்லாமிய மார்க்கதிற்கு அதில் கடுகளவும் உடன்பாடு இல்லை ...

 “அதர்மம் அதிகரிக்கும் போது அதனை அழிக்கக் கடவுள் அவதாரம் எடுப்பார்” என இந்து மதம் கூறுவதால் அதர்மத்தை அழிக்க ஒரு இந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை என்ற சிந்தனையை அதன் அங்கத்த வர்களுக்கு அளிக்கின்றது. எனவேதான் தீமையைக் கண்டால் விலக்கு என்று அல்ல, விலகி விடு எனப் போதிக்கின்றனர். தீமையைப் பார்க்காதே. தீமையைப் பேசாதே! தீமையைக் கேட்காதே. என்று போதித்தவர்கள் கூட தீமையை எதிர் என்றோ, தடு என்றோ போதிக்க வில்லை. இது இந்து மதத்தினுடைய சித்தாந்தமாக இருக்கிறது...

அதே போல ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் கொடு உன் ஒரு உடையைக் கேட்டால் மற்றொரு ஆடையையும் சேர்த்துக் கொடு. தீமையோடு எதிர்த்து நில்லாதே என்கிறது கிறிஸ்தவ மதம்.

இப்படியாக ஏனைய மதங்களோடு ஒப்பிடும்போது கூட தன் அங்கத்தவர்களுக்கு தீமையை எதிர்த்துப் போராடும் உணர்வை வழங்கியிருப்பது இஸ்லாத்தின் ஒரு மேலான சிறப்பம்சம் என்றே கூற வேண்டும்..தவிரவும் தீமையைத் தடுக்காமை அல்லாஹ்வின் அதிருப்தியைத் தேடித் தரும் தீய சிந்தனையாகவும் கருதப்படுகிறது.. இதனை அல்குர்ஆன் கூறும் பின்வரும் சம்பவம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

“பனு இஸ்ரவேலர்களுக்கு சனிக்கிழமையில் மீன் பிடிப்பது தடுக்கப்பட்டிருந்தது. கடலோரத்தில் வாழ்ந்த ஒரு கூட்டத்தை அல்லாஹ் சோதிப்பதற்காக அன்றைய தினத்தில் மீன்களை அதிகமாக நீர் மட்டத்திற்கு வரச்செய்தான். இதனைக் கண்ட ஒரு கூட்டம் மீன்பிடிக்கிறது. இன்னும் ஒரு கூட்டம் மீன்பிடிப்பதைத் தடுக்கிறது. இன்னுமொரு கூட்டம் தவறுசெய்யாமலும், தவறுசெய்வோரைத் தடுக்காமலும் இருக்கிறது. அல்லாஹ்வின் கட்டளைவந்தபோது தவறு செய்தவர்களும் தவறைத் தடுக்காதவர்களும் குரங்குகளாக மாற்றப்பட்டனர்.”
மேற்படி சம்பவத்தில் தீமையைத் தடுத்தோர் தவிர்ந்த மற்றைய தீமை செய்யாதோர்-நன்மை செய்யாதோர் ஆகிய இரு தரப்பாரும் தண்டிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்  தீமையைத் தடுக்காதோரையும் இஸ்லாம் தவறு செய்பவர்களாகவே நோக்குகின்றது.. பாவத்தின் பங்கு தாரர்களாகவே இவர்களையும் காண்கிறது.

"எனது ஆன்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நீங்கள்; நம்மையை ஏவுங்கள் !
அநீதியைத்  தடுங்கள் !  இல்லாவிட்டால் அல்லாஹ்     அவன் புறத்திலிருந்து உங்கள்குத் தண்டனையை அனுப்புவான் .பின்னர், நீங்களா அவனிடம் பிரார்த்திப்பீர்கள் . ஆனால் அது ஏற்றுக்  கொள்ளப்பட மாட்டாது .
ஆதாரம்- அத்திர்மிதி அஹ்மத்


இந்த ஹதீஸை நோக்கும் போது, முஸ்லிம்கள் தம்மீதுள்ள "நன்மையை ஏவி தீமைகளைத் தடுத்தல் "பணியைப் புறக்கணித்தால். அல்லது அதனை மிகச் சிறந்த முறையில் திட்டமிட்டு நிறைவெற்றா விட்டால். அல்லாஹ்வின் தண்டனை அச்சமூகதிட்கு இறங்கும் என நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள் .அது மட்டுமன்றி இத்தண்டனையை நீக்கி விடுமாறு கோரும் பிரார்த்தனைகளையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் எனக் குறிப்பிடிருப்பது இந்த விடயத்தின் பாரதூரத்தை உணர்த்தி நிற்கிறது..
இந்த எச்சரிக்கையில் சிறிதேனும் அச்சம் ஏற்படக் கூடாது என்பதற்க்காக தனது வாழ்வின் பிடியை வைத்திருக்கும் அல்லாஹ் மீது நபி (ஸல் ) அவர்கள் சத்தியம் செய்திருகிறார்கள்.

நல்ல விசயங்கள்  அல்லது நல்லவைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும். அதற்காக உழைப்பதும் ஒரு முஸ்லிமின் மிக முக்கிய கடமையாக கருதப்படுகிறது, என்பது அல்லாஹ்  விரும்புகின்ற, திருப்தி கொள்கின்ற, சொல் செயல்களைக் குறிக்கின்றது. அத்தோடு பொருளாதாரக் கொடுக்கல்  வாங்கல்கள், குற்றம் - தண்டைனைகள், உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், போன்றவற்றில்  சரியான ஷரியத் ஒழுங்குகளை பேணுவதும், வாய்மை , நீதி, அமானிதம், தன்மான உணர்வு, வாக்கு நிறைவேற்றல் போன்ற, நற்பண்புகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இதற்க்கு நேர் எதிரான குணங்கள் ஷிர்க் , உளநோய்களான முகஸ்துதி, பொறாமை, எதிர்ப்பு வெறி, போன்றவற்றை அல்லாஹ் ஒரு போதும் விரும்புவதில்லை. ஒரு சமூகத்தில் பொய், அநியாயம், அத்துமீறல், மோசடி, கோழைத்தனம்  என்பன காணப்பட்டாலும், இதுவும் மிக ஆபத்தான நிலை ஆகும். இவை மனித இயல்போடு முரண்பட்டு நிற்பவை. இந்தப் பண்புகளை முதலில் தன்னிலிருந்தும் மற்றவர்களிளிருந்தும் களைந்தெறிய வேண்டும்
.

எனவே இதனை ஒரு சிறிய விடயமாக நோக்கலாகாது. தொழுகை எமக்கு எவ்வாறு கடமையாக இருக்கிறதோ.. நோன்பு எமக்கு எவ்வாறு கடமையாக இருக்கிறதோ ...மறுமைக்காக அமல்கள் தேடுவது எவ்வாறு கடையாக இருக்கிறதோ .. அதுபோலவே ஒவ்வொரு மனிதன் மீதும் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் கடமையாக இருக்கிறது.இந்த இரண்டு பணிகளையும் ஒரு சமூகம் கச்சிதமாக நடைமுறைப்படுத்தினால் அதற்குக் கிடைக்கின்ற முதல் வெற்றி அல்லாஹ்வின் சாபக் கேட்டிலிருந்தும்> தண்டனையிலிருந்தும் தப்பித்துக் கொள்வதாகவே அமையும். இந்த மகத்தான பணியை மேற்கொள்ள முதலில் ஒவ்வொருவரும் தம்மை நன்மையின் பால் திருப்பிக்  கொள்ள வேண்டும்..இயல்பாகவே ஒவ்வொரு மனிதனிலும் குடி கொண்டுள்ள துர்குணங்களிலிருந்து >  தன்னை தூரமாக்கி கொள்ள வேண்டும். அதேபோல குடும்பத்திலும் சமூகத்திலும் இதே நிலைமையை உருவாக்கி கொள்ள
 தலைப்படல் வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் மனிதப் பண்பாடுகள் சீரழிந்து போவதற்கான எல்லா நிலைமைகளும் நிறைந்திருகின்றன.ஒரு மனிதன் நாளாந்தம் எதிர்க் கொள்கின்ற சுற்று சூழல் அவனது சிந்தனைப்பாங்கிலும்> நடத்தையிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றது.  இயல்பிலேயே பலவீன குணங்களால் வார்க்கப்பட்ட இந்த மனிதன் புறக்காரணிகளின் தாக்கதிற்குட்பட்டு> அடிக்கடி நிலைமாறக்கொண்டிருக்கிறான். அசத்தியமும் ஜாஹிளியத்தும் எங்கும் பரவி வியாபித்துப் போய் இருக்கும் இந்நிலையில்> அனைத்து மக்களையும் ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையின் பால் இட்டுச் செவதற்க்கும்> அதற்கான  ஒரு சூழலை ஏட்படுதுவதட்குமான ஒரு சீர்திருத்தப்பணி முகவும் அவசியமாகின்றது.

இந்நிலை குறித்து  கவலைப் படாமலும் > சிந்திக்காமலும் ஒரு  முஸ்லிம் இருக்க  முடியாது. நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் பணி மிக முனைப்புடன் முன்னெடுத்து செல்லபட்டால் மட்டுமே சமூகத்தின் ஒழுக்கபரிமாணம் சீர்கெட்டு சிதைந்து விடாமல்  இருக்கும் வகையிலான பொது அபிப்பிராயம் ஒன்றை உருவாக்குவது  சாத்தியமாகும்
.
சகோதரத்துவ பண்புகள் சமூகத்தில் செல்வாக்குப் பெறவும்>இஸ்லாமிய ஷரிஆவை சிறந்த முறையில் நடைமுறைக்கு கொண்டு வரவும் இந்தபணியின் தேவை தவிர்க்க முடியாததாகும்.

உங்களில் யாராவது தீமையைக் கண்டால் அதை அவர் தன் கையால் தடுக்கட்டும். அதற்கு முடியாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும். அதற்கும் முடியாவிட்டால் உள்ளத்தால் அதை வெறுத்து ஒதுங்கிக் கொள்ளட்டும். இதுவே ஈமானின் மிகப் பலவீனமான நிலையாகும்.”

தெளிவான வாழ்வியல் முறைகளை இஸ்லாம் தந்திருக்கிறது. கண்டும் காணாமல் போவது , நமக்கேன் வம்பு என் ஒதுங்கி ஓடுதல் போன்ற நிலைகளிலிருந்து தவிர்ந்து, குரல்களை ஒங்கச் செய்வோம்..ஆகக் குறைந்தது மனதளவிலாவது வெறுத்து ஒதுக்குவோம்.. அல்லாஹ் விரும்புகின்ற ஒரு நல்ல அடியானாக வாழ்வதற்கு நம் ஒவ்வொருவர் மனதிலும் உறுதியான ஈமானையும் , பாவங்களின் பங்கு தாரர்களாக எம்மையும் ஆக்கிவிடாமல், அவன் அருளை வேண்டி பிரார்த்திப்போம்..

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக..........


Shaifa Begum Abdul Maleek
 London


No comments:

Post a Comment