Sunday 26 June 2011


நாம் அன்று நினைக்கவில்லை !!

நாம் அன்று நினைக்கவில்லை
இப்படியும் ஆகுமென்று...........
எம்மக்கள் எங்களை இன்று
ஒதுக்கிதான் வைப்பார்களென்று...
உன்னதம் என்று தானே..
உயிரையும் இழக்க துணிந்தோம்...
ஏன் இப்படி ஆனோம் இன்று..?
நாம் அன்று நினைக்கவில்லை..
துளி கூட யோசிக்கவில்லை !

பிழை என்ன செய்தோம் நாம்...?
இகபர இன்பம் துறந்தோம்..
உடலின் உறுப்புக்கள் தானிழந்தோம்..
இத்தனையும் செய்துமென்ன..? இப்போ
வேறறுந்து  நிற்கின்றோம்..
அழுதாலும் தொழுதாலும்
வாழ்வில்லை இனி நமக்கு...
நாம் அன்று நினைக்கவில்லை..
இப்படியும் ஆகுமென்று!!!

ஒரு நிமிஸம் எம் நிலையில்..
நின்றுதான் பாருங்களேன்!!!
அப்போது புரியுமெங்கள்
அவஸ்தையும் உங்களுக்கு !!!
தன்மானம் காக்கவென்றே..
நமக்காக ஆயிரம் பேர்
உறங்குகின்றார் கல்லரையில்..
நம்நிலை அறிந்து விட்டாலோ
வடிப்பார்கள் ரத்தக் கண்ணீர்...
இனி என்ன செய்வது...?
நாம் அன்று நினைக்கவில்லை
இப்படியும் ஆகுமென்று!!

மகத்தான நாளிலின்று
மன்றாடி சொல்கின்றோம்..
மறுவாழ்வு கேட்கின்றோம்...
தோள் கொடுத்து எங்களை
தோழமை ஆக்குங்கள்...
தோஷம்  என்று எண்ணி...
 தொலை தூரம் ஆக்கிடாதீர்!
மன்றாடி சொல்கின்றோம்..
மறுவாழ்வு கேட்கின்றோம்...
தோள் கொடுத்து எங்களை
தோழமை ஆக்குங்கள்   ----------------------------

அன்புடன்...



















தமிழ் கொண்டு மாலை நீ தொடுத்தாய்
தரணி எங்கும் மணம்  நீ கொடுத்தாய்..
உலகோடு உறவாடி உரம் கொடுத்தாய்..
உள்ளன்பு ஒன்றேஉயிரென்று சொன்னாய்..

எழுத்தோடு விளையாட களம் அமைத்தாய்
வானலையின் மந்திரம் வாழ்வியல் நீயென்றாய்.
சோக்காக தமிழ் பேச வழி சமைத்தாய்..
சொக்கித்தான் போனேன் நான்  உன் உயர்வு கண்டு.

பதின்மூன்று ஆணடுகள் கடந்து தான் நின்றாலும்,
நாளும் தான் உன் இளைமை குலுங்குது பூத்து

புதுமை உந்தன் புறத்தினின்றும்
தடம் புரளாமல்  தானிருக்க
நானிருந்து வாழ்த்துகிறேன்
நன்றியோடும் பார்க்கிறேன்..
நாளும்
நானிருந்து வாழ்த்துகிறேன்
நன்றியோடும் பார்க்கிறேன்

-------------------

அன்புடன்..




பெண்ணல்ல நீ காவியம்...


இந்த நூற்றாண்டின்,
புரட்சிப் பெண் நீ ...
உனக்கு மட்டும்
எப்படி இந்த மனப்பக்குவம்...?

சொகுசை நம்பி,
சொந்தத்தை உதறும் காலத்தில்..
சொந்தத்தைத் தேடியும்,
சொப்பன வாழ்வை மறந்தும்,
சொகுசை உதர்கிறாய்...
பெண்ணே!!!
புரியவில்லை எனக்கு ..
சங்க காலத்து காவியப்பெண்ணா நீ...

பெண்ணே !!
உன்னால் பெருமை
உனைப் பெற்றவர்களுக்கு மட்டும் அல்ல...
பெண்ணாய்ப் பிறந்த அனைவருக்குமே..

உன் மன தைரியம் பாராட்டாமல்
என்னால் இருக்க முடியவில்லை..
உடம்பெல்லாம் புல்லரிக்குது,
உனை நினைக்கையிலே..
உன் மன பக்குவம்,
யாருக்கு வரும் அம்மா ...?

முடிவு எடுத்து விட்டாய்..
தாய் மண் உன் பாதம் மிதிப்பதாய்..
புறப்பட்டு விட்டாய் ..
இலட்சிய வாழ்வை அடைவதற்காய்...
சந்தோசம்..
எனக்கிதில் இரட்டிப்பு சந்தோசம்..

நாளை உன் பாதம்..தாய் மண்ணில்..
வெற்றி நடை போட வேண்டும்..!
மணவாழ்வு சிறக்க வேண்டும்..!
 நூறு தரம் இறையை வேண்டி,
மனமின்றி விடை பெறுகிறேன்..
                        ---------------------------

அன்புடன்..

































தாயே....



யாருக்குத்தான் இல்லை சோகம்..?
நீ இப்பாரினை தரிசித்த பொன்னாள் இது..
உன் உள்ளக்கடக்கையை சோக வரிகளாக்கி
கவி தந்தாய் தாயே...
புரிந்து  கொண்டேன் .. - உன்
உள்ளுணர்வு உச்சஸ்தாயில்
உயிரில் உனை மீட்டுவதை!!!

தப்பில்லை என்றால், -நான்
உனை ஒன்று சொல்வேன்..
உன்னில் இருந்து தவறிவிட்டவை,
விட்டவையாக இருக்கமட்டுமே....
மறந்து விடு நீயும் கவலையை..

பிறப்பு , இறப்பு உலக நியதி தானே!!
இன்றைக்கு உனக்கு என்றால்,
நாளைக்கு எனக்கம்மா !!! இதில்
இருந்து தப்பித்தவர் யாரும் உளரோ அம்மா..!!

மீண்டுமாய் நானுனக்கு சொல்கிறேன்...
இந்நாள் உனக்கு பொன்னாளே...
கலங்காதே தாயே நன்னாளில் !!
உனக்குத்தான் இருக்கிறது உன் தமிழ்..
எழுதுவாய் ஆயிரம் கவிகள் சரித்திரம் படைக்க.!!
முன்னெடுத்துச் செல்வாய்..
உன் வாழ்வை வெற்றிகராமாக !

அழகான இந்நாளில்,
சின்னவள் நான் பெரிதாக வாழ்த்துகிறேன் !

(என்னோட கிறுக்கல்கள் பார்த்து யாரும் சிரிக்க வேண்டாம்..)

அன்புடன்















ஒரு குழந்தையின் தேடல்..தவிப்பு அற்புதமாக வரிகளில்.. கண்டிப்பாக நான் கதையின் ஆசிரியர் அல்ல..கேட்டுப்பாருங்கள் . இதுபற்றி உங்கள் எண்ணம், அபிப்பிராயங்களையும் சொல்லுங்கள்..

Wednesday 18 May 2011


”பகுத்தறிவு கவிதைக்கு அதிகம் பயன்படாது. கற்பனை உலகில், கற்பனைக் கட்டளைப்படி, பகுத்தறிவு ஆட வேண்டுமே தவிர, பகுத்தறிவையே அத்திவாரமாகக் கொண்டு கவிதை எழுத முடியாது.